சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கு ஏப்ரல் 3ம் தேதிக்கு (திங்கள் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மான மேல்முறையீட்டு வழக்கில் இறுதிவிசாரணைக்கு அனைத்து தரப்பும் தயாராக உள்ளனர். இறுதிவிசாரணைக்கு தயார் என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இறுதி விசாரணைக்கு தயார் என அனைத்து தரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.