தமிழ்நாடு முழுவதும் 64 டிஎஸ்பிக்கள் கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 64 டிஎஸ்பிக்ள் கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையில் கடந்த 1996ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 1996ம் ஆண்டு பணியில் சேர்ந்த 64 பேர் இன்ஸ்பெக்டர்களாக பணிற்றி தற்போது டிஎஸ்பிக்களாகவும் பணியில் உள்ளனர். சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் ராயப்பேட்டை உதவி கமிஷனர் சார்லஸ், வேப்பேரி உதவி கமிஷனராக உள்ள அரிகுமார் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள பூந்தமல்லி உதவி கமிஷனராக உள்ள முத்துவேல் பாண்டி, தாம்பரம் காவல் ஆணையகரத்தில் உள்ள தாம்பரம் உளவுத்துறை உதவி கமிஷனர் என தமிழ்நாடு முழுவதும் 64 டிஎஸ்பிக்கள் தற்போது கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் நாட்களில் 64 பேரும் கூடுதல் எஸ்பிக்களாக பதவியில் அமர்த்தப்படுவார்கள்.

Related Stories: