இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்கள் சென்னை வந்தனர்

சென்னை: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்கள் சென்னை வந்தனர். 16 மீனவர்களும் கொழும்பு நகரில் இருந்து புறப்பட்டு இன்று மாலை 3.15 மணிக்கு சென்னை வந்தனர். சென்னை வந்த 16 மீனவர்களும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையால் மார்ச் 12-ல் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய, மாநில அரசுகளின் முயற்சியால் இலங்கை நீதிமன்றத்தால் 16 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: