நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் படம் பார்க்க அனுமதிக்காத புகாரில் ரோகிணி திரையரங்க பணியாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை: நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் படம் பார்க்க அனுமதிக்காத புகாரில் ரோகிணி திரையரங்க பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் திரையரங்கு பணியாளர்கள் 2 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரையரங்கில் நரிக்குறவ பெண்ணை அனுமதிக்காத விவகாரம் குறித்து வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: