பொன்னியின் செல்வன் பட விவகாரத்தில் இயக்குனர் மணிரத்னத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: பொன்னியின் செல்வன் பட விவகாரத்தில் இயக்குனர் மணிரத்னத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக மணிரத்னம் மீது புகார் கூறி வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என்று மனுதாரருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories: