சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலக குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தின், செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ராஜா உசேன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஷபிக் அகமது கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் வழ.ராஜா முகமது கலந்துகொண்டார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.