மெரினா கடற்கரை ஓரமாக மீனவ குடியிருப்புகளை ஒட்டியுள்ளலூப் சாலைக்கு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும்: மயிலாப்பூரை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும்

* பேரவையில் மயிலை த.வேலு எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: மெரினா கடற்கரை ஓரமாக மீனவ குடியிருப்புகளை ஒட்டியுள்ள லூப் சாலைக்கு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும். மயிலாப்பூரை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு கூறினார். சட்டப்பேரவையில் மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு பேசியதாவது:  சமுதாயத்தில் என்னை போன்ற உழைக்கும் ஏழை பெண்களுக்கு உரிமைத் தொகையை அறிவித்த முதல்வருக்கு எங்களது சார்பாக நன்றியை தெரிவித்து விடுங்கள் என்று மகிழ்ச்சியோடு பெண்கள் கூறினார்கள் என்றார். தொடர்ந்து தொகுதி மக்களின் கோரிக்கையான, கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு கலைஞருக்கு பிடித்த இடம் மெரினா கடற்கரை, மெரினா கடற்கரை ஓரமாக மீனவ குடியிருப்புகளை ஒட்டியுள்ள லூப் சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரை சூட்ட வேண்டும். நிறைவடையும் தருவாயில் உள்ள ஆர்.ஏ.புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வள்ளீஸ்வரன் தோட்டத்திற்கு கலைஞர் நகர் என்று பெயர் சூட்ட வேண்டும்.

மயிலாப்பூர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டிடங்கள் பழுதடைந்த காரணத்தினால் மக்களிடம் பேசி 30 மாதங்களில் கட்டிமுடித்து தருகிறோம் என்று உறுதியளிக்கிறோம்.  ஆனால், அது சரியாக பின்பற்றப்படவில்லை. காரணம் இன்றைய சூழ்நிலையில் வீட்டு வாடகை அதிகமாக சுமையாக இருக்கிற காரணத்தால் மக்கள் கொந்தளிக்கின்றனர். தேனாம்பேட்டை வன்னியபுரம் காலி செய்து 11 மாதங்கள் ஆகியும் அடிக்கல்  நாட்டப்படவில்லை. நாட்டான் தோட்டம், பருவா நகர், ஆண்டிமான்ய தோட்டம், பிள்ளையார் கோயில் தோட்டம், முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் மக்கள் வீட்டை காலி செய்துதர தயார் நிலையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்திட வேண்டும்.

வரலாற்று சிறப்பு மிக்க மயிலாப்பூருக்கு என்று ஒரு தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும், மயிலாப்பூரை சுற்றுலாத் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற உதவிட வேண்டும். மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வெங்கடேச அக்ரகாரம் சாலையில் உள்ள பழைய வணிக வளாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் மற்றும் மல்ட்டி ெலவல் கார் பார்க்கிங் கட்டி ெகாடுத்தால் கோயிலுக்கு வருமானமும், மயிலாப்பூரில் போக்குவரத்து நெரிசலும் குறையும். கால்நடைகள் பராமரிக்க ஒரு தனி இடம் சென்னை மாநகராட்சி அமைத்துதர வேண்டும்.

126வது வார்டில் பாரதிநகர் வாழ்குடியிருப்பு மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இடத்திற்கு  விற்பனை பத்திரம் கொடுக்கப்பட வேண்டும். இது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒரு பகுதி கொடுக்கப்பட்டு விட்டது, இதற்கு ஆவன செய்ய வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் வாடகையை பல மடங்கு உயர்த்திய காரணத்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகமான நிலுவை தொகை கட்டகூடிய சூழ்நிலை இருக்கிறது. இதற்கு அரசு ஒரு சரியான, சுமுகமான முடிவை ஏற்படுத்தி ஏழை மக்களை காப்பாற்றிட வேண்டுகிறேன். மீனவ மக்கள் அதிகமாக வசிக்கும் வாரிய குடியிருப்பு பகுதியில் சிங்கார வேலவரின் மார்பளவு சிலை அமைக்க வேண்டும். இவ்வாறு மயிலை த.வேலு எம்எல்ஏ பேசினார்.

Related Stories: