பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவுநீரிறைக்கும் நிலையம் 2 நாள் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 2 நாட்களுக்கு புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது. கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (மார்ச் 31) முதல் 2 நாட்களுக்கு 8வது மண்டலத்திற்குட்பட்ட புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. எனவே, மண்டலம் 4, 5, 6, 7, 8 மற்றும் 9க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்றலாம். இதற்காக அலுவலர்களையும் மற்றும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் தொடர்பு கொள்ளவும்.

Related Stories: