மயிலாடுதுறை: மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளதாக முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: ராகுல்காந்தியை கைது செய்து சிறையில் அடைக்ககூடிய எழுதப்படாத ஒரு சட்டத்தை மோடி தலைமையிலான ஆட்சி அமல்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதால்தான் இதுபோன்ற நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, அதானிக்கு ஏஜென்ட் ஆக செயல்படுகிறார்.