சென்னை: தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், மக்களின் உணர்வுகளை மதியுங்கள், இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் தாய் மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், மக்களின் உணர்வுகளை மதியுங்கள், இந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.