சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராகுல் காந்தி தகுதியிழப்புக்கு எதிராக கடந்த 26ம் தேதி இந்தியா முழுவதும் அறப்போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்.15ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்தும் மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது. 20ம் தேதிவரை தொடர் போராட்டங்கள் நடைபெறவுள்ளது.