75 நாளுக்குள் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு

சென்னை: 75 நாட்களுக்குள் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் வெற்றிகரமாக இயக்குவதை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகராக ஒப்பந்தத்தை ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் ஆண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவகத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன்  தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர், விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களுக்குள் தயாரித்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மதுரையில் பங்குதாரர்கள் கூட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமையில் நடைபெறவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: