சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருந்த 3,552 இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவு நேற்று சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலிப்பணியிடங்களுக்கான காவலர் பொதுத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இரண்டாம் நிலை காவலர்கள் ஆயுதப்படை ஆண்கள் 1,526 பணியிடங்கள், ஆயுதப்படை பெண் 654 பணியிடங்கள் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்கள் ஆண் 153 பணியிடங்கள், பெண் 8 பணியிடங்கள், தீயணைப்பு துறையில் 120 பணியிடங்கள் என மொத்தம் 3,552 காலியிடங்களாக அறிவிக்கப்பட்டது.