கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சென்னை: கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள இளங்கலை படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் ‘கியூட்’ நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.  இந்த முறை 3 ஷிப்டுகளில் ‘கியூட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள். விண்ணப்பப்பதிவில் திருத்தங்கள் இருந்தால் வரும் 1ம் தேதி முதல் 3ம் தேதிக்குள் திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வை பொறுத்தவரையில், வருகின்ற மே மாதம் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: