சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான துறை ரீதியான மானியக்கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் தொடங்கியது. கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.