பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உத்திரமேரூர் க.சுந்தர் (திமுக) பேசுகையில், ‘‘உத்திரமேரூர் கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா’’ என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தினுடைய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த நிலைகளையெல்லாம் அறிந்து, தற்போது 245 நடமாடும் கால்நடை வேன்களை இயக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.