அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் கால்நடைகளுக்கு சிகிச்சை தர 245 நடமாடும் கால்நடை வேன்

பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உத்திரமேரூர் க.சுந்தர் (திமுக) பேசுகையில், ‘‘உத்திரமேரூர் கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா’’ என்று கேட்டார்.   இதற்கு பதில் அளித்து அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:  தமிழகத்தினுடைய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த நிலைகளையெல்லாம் அறிந்து, தற்போது 245 நடமாடும் கால்நடை வேன்களை இயக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

அந்த வகையிலே, எந்தெந்த பகுதியில் தேவைகள் இருக்கின்றதோ, எந்தெந்த பகுதியில் கால்நடைகளுக்கு சிகிச்சை தேவைப்படுகிறதோ அங்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான திட்டங்களை முதல்வர் தந்திருக்கின்றார். அதை நடைமுறைப்படுத்துவோம். இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனர் கூறினார்.

Related Stories: