சென்னை மாநகராட்சி 7 கோட்டங்களில் புதைவட கம்பி அமைக்கும் பணி முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

அம்பத்தூர் ஜோசப் சாமுவேல் (திமுக) பேசுகையில், “அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பங்களை புதைவடக் கம்பிகளாக மாற்றியமைக்கும் பணிக்காக மதிப்பீடு தயாரிக்கப்பட்டதாக அறிகிறேன். என்னுடைய தொகுதி மக்களின் நீண்டநான் கோரிக்கையாக உள்ள இந்த பணிகள் வரும் நிதியாண்டிலே துவங்கப்படுமா? என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்,”அம்பத்தூர் மட்டுமல்ல, மொத்தம் 7 கோட்டங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி கிடைக்கப்பெற்ற பிறகு, சென்னை மாநகராட்சியில் இருக்கக்கூடிய 7 கோட்டங்களில் புதைவட கம்பிகள் அமைக்கக்கூடிய பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்” என்றார்.

Related Stories: