சென்னை: வாலிபரிடம் கத்தியைக் காட்டி 2 சவரன் மற்றும் பணம் பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் சென்னை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(30). கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு மதுரவாயலை அடுத்த செட்டியார் அகரத்தில் உள்ள கார் உரிமையாளர் வீட்டில் காரை நிறுத்திவிட்டு டு வீலரில் வீட்டுக்கு சென்றார். மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வந்தபோது, அங்கு தனியாக நின்றிருந்த மர்ம நபர் சுதாகரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரை தனது டு வீலரில் ஏற்றிக் கொண்டு, அடையாளம்பட்டு பகுதி அருகே வந்தார்.