கத்தி முனையில் மிரட்டி வாலிபரிடம் நகை பறிப்பு

சென்னை: வாலிபரிடம் கத்தியைக் காட்டி 2 சவரன் மற்றும் பணம் பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் சென்னை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(30). கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு மதுரவாயலை அடுத்த செட்டியார் அகரத்தில் உள்ள கார் உரிமையாளர் வீட்டில் காரை நிறுத்திவிட்டு டு வீலரில் வீட்டுக்கு சென்றார். மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வந்தபோது, அங்கு தனியாக நின்றிருந்த மர்ம நபர் சுதாகரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரை தனது டு வீலரில் ஏற்றிக் கொண்டு, அடையாளம்பட்டு பகுதி அருகே வந்தார்.

அப்போது லிப்ட் கேட்டு ஏறிய மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, சுதாகரிடமிருந்து 2 சவரன், ரூ. 5 ஆயிரம் ரொக்கம், மற்றும் டு வீலர் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.  புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: