வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகளவில் வௌிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற எச் 1 பி விசா என்ற தற்காலிக விசா மூலம் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் 2 லட்சம் ஐ.டி பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள். இந்நிலையில், தற்காலிக எச் 1 பி விசா வைத்துள்ள, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் 60 நாட்களுக்குள் புதிய வேலையை தேடி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவை விட்டு வௌியேற வேண்டும் என்று தகவல்கள் வௌியாகின.