பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே உருவாக்க வேண்டும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும், 100 நாள் வேலைக்கு வாக்குறுதி அளித்தபடி 150 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும்.

உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், 60 வயதான விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி உதவி தொகை வழங்கிட வேண்டும், குடிமனை பட்டா கோரி மனு அளித்துள்ள மக்களுக்கு நிபந்தனையின்றி பட்டா வழங்கிட வேண்டும், பொது விநியோக திட்டத்தை பலப்படுத்தி தரமான பொருட்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: