தகாத உறவை பார்த்த கணவனை சரமாரி வெட்டிய மனைவி போலீசில் சரண்

நல்லம்பள்ளி: தகாத உறவை பார்த்த கணவனை வெட்டிய மனைவி போலீசில் சரணடைந்தார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த காமராஜர் நகரை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ராஜாமணி(50). இவரது மனைவி செல்வி (45). 3 மகள்கள். ஒருவர் இறந்துவிட, 2வது மகளுக்கு திருமணமாகிவிட்டது. 3வது மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ராமனுடன்(26) செல்விக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கணவன் கண்டித்தும் இது நீடித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜாமணி, மனைவி செல்வி, ராமனுடன் தனிமையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். வாக்குவாதம் முற்றவே செல்வி, கொடுவாளால் ராஜாமணியின் தலை, கை, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.  இதைப்பார்த்த ராமன் ஓடிவிட்டார். பின்னர் தொப்பூர் காவல் நிலையம் சென்று செல்வி சரணடைந்தார். அப்பகுதியினர் உயிருக்கு போராடிய ராஜாமணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி வழக்கு பதிந்த போலீசார் செல்வியையும் ராமனையும் கைது செய்தனர்.

Related Stories: