சென்னை: தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை சரியாக 10:30 மணி முதல் தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் என்பது ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேக் செய்யப்பட்ட முகநூல் பக்கத்தில் ஹேக்கர்கள் கார்ட்டூன் புகைப்படங்களை பகிர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் சமூக வலைத்தளமான முகநூலில், பல்வேறு ரயில்வே குறித்தான பயனுள்ள பதிவுகள், பதிவு செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் (Southern Railway) என்ற பெயரில் தெற்கு ரயில்வேயின் முகநூல் பேஜ் இயங்கி வருகிறது.