சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை என்ற தீர்ப்பையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்கிறார். ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகிறார். உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து எடப்பாடி பழனிசாமி இல்லம் முன்பு தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.