சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  புளியந்தோப்பு பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண்மணி. இவர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது 4 வயது குழந்தையை கடந்த ஒரு வருடமாக சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (52) என்ற ஆட்டோ ஓட்டுனர் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார்.

இவர், தினசரி வீட்டிற்கு வந்து லிப்டில் குழந்தையை அழைத்து செல்லும்போது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். விசாரணையில், வெற்றிவேல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து நேற்று அவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: