பெரம்பூர்: சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பசவய்யா (42), கொத்தனார். இவரது மனைவி நாராயணம்மா. தம்பதிக்கு, நந்தினி என்ற மகளும், 17 வயதில் திருப்பதி ராஜி என்ற மகனும் உள்ளனர். இதில், திருப்பதி ராஜி பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நந்தினி அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று 12ம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வு நடைபெற்றதால், அதற்காக திருப்பதி ராஜி நேற்று முன்தினம் முழுவதும் படித்துக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு அனைவரும் தூங்கச் சென்றனர். இரவு 3 மணிக்கு பசவய்யா எழுந்து பார்த்தபோது, அறையில் படுத்திருந்த திருப்பதி ராஜி காணாமல் போயிருந்தார்.