திருப்போரூர்: விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன், விஐடியின் துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்பேரில், செங்கல்பட்டு மாவட்டம் காயார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விஐடி சென்னையின் சார்பில், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதன், துவக்க விழாவில், தலைமை விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் சையது முகமதுஷா கலந்துகொண்டு முகாமினை துவங்கி வைத்தார். கவுரவ விருந்தினராக காயார் கிராமத்தின் ஊராட்சி தலைவர் ரமேஷ், விஐடி சென்னை இணை துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.