ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரசித்திபெற்ற வழிவிடு முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்தாண்டும் 83ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் இன்று துவங்கியது. இதில் முதல் நிகழ்வாக இன்று காப்புகட்டு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.