திருப்போரூர்: தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 5ம் ஆண்டு விழா நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு சங்கத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பொருளாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் வரவேற்றார். துணை தலைவர்கள் கார்த்திக், அன்பு, சுந்தரம், கணேசன், முருகன், லட்சுமணன், நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழ்நாடு மணல் லாரி சங்க தலைவர் யுவராஜ், தமிழ்நாடு மணல் லாரி சங்க சம்மேளன தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.