மாணவியை கர்ப்பமாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர் கைது

ஆத்தூர்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். ஆயுதப்படை போலீஸ்காரரான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்2 மாணவியுடன்  பழக்கம் ஏற்பட்டது. அவர்களிடையே தகாத உறவு ஏற்பட்டதில் அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.  புகாரின்பேரில், ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த 24ம் தேதி பிரபாகரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரித்தனர்.

அப்போது, காவல்நிலையத்திலிருந்து பிரபாகரன் திடீரென ஓட்டம் பிடித்தார். இதையடுத்து,  தனிப்படை போலீசார், அவரை தேடி வந்தனர். இதனிடையே, கள்ளக்குறிச்சியில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த பிரபாகரனை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவர், இன்று கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனிடையே பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து, பெரம்பலூர் எஸ்பி ஷியாம்ளா தேவி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: