ஆத்தூர்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். ஆயுதப்படை போலீஸ்காரரான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களிடையே தகாத உறவு ஏற்பட்டதில் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். புகாரின்பேரில், ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த 24ம் தேதி பிரபாகரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரித்தனர்.