குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை மாபெரும் வெற்றி அடைய செய்வேன் என்று சசிகலா கூறியதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம். சாதாரண தொண்டர்கள் கூட பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் 10 மாவட்ட செயலாளர் முன்மொழிந்து 10 மாவட்ட செயலாளர் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம் என்று விதிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.