மதுரை: வைகை நதிக்கரையில் 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் உள்ளன என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மதுரை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, நூலகத்துறை சார்பில் ‘வைகை இலக்கியத் திருவிழா’ மதுரை உலக தமிழ்ச்சங்க கூட்டரங்கில் நேற்று துவங்கியது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சங்க காலத்தில் பெருமை வாய்ந்ததாக வைகை நதி பேசப்படுகிறது. வைகையின் சிறப்புகளை எடுத்துச் சொன்னது இலக்கியவாதிகளும் அவர்களது படைப்புகளும்தான்.