சென்னை: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. தமிழக அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஜான்வெஸ்லி வரவேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கடந்த ஆறு மாத காலம் கடந்தும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு செய்து நிலுவை தொகை வழங்காமல் உள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.