சென்னை: மனிதநேய மக்கள் கட்சி சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எம்எல்ஏ அப்துல் சமது, மாநிலத் துணைப் பொதுச் பொதுச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாகூப் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.