தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நீடிப்பாரா என்பதே கேள்விக்குறி: ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எம்எல்ஏ அப்துல் சமது, மாநிலத் துணைப் பொதுச் பொதுச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாகூப் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா கூறுகையில் : சமூக நீதி மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் பாஜ செயல்பட்டு வருகிறது. இதன் எடுத்துக்காட்டாக தான் ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடும் பாஜ தலைவர் அண்ணாமலை வாய் வீச்சில் வல்லவர். அது தவிர வேறு ஒன்றும் இல்லை கட்சியில் அவர் தலைவராக நீடிப்பாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.

Related Stories: