வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு வலை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த 40 வயது தொழிலாளி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி சக்கரலப்பா (40). இவர் கடந்த 8ம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, பொருள் கேட்பதாக வீட்டிற்குள் சென்று சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதை யாரிடமாவது கூறினால் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி சென்றுள்ளார். அதில் பயந்துபோன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் சக்கரலப்பா சிறுமியின் வீட்டிற்குள் சென்று வந்ததை பார்த்த பக்கத்து வீட்டு சிறுவன், இதுகுறித்து உறவினர்களிடம் கூறியுள்ளான்.

இதையடுத்து உறவினர்கள், சிறுமியிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவம் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம், சக்கரலப்பா மீது போக்சோ வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்.

Related Stories: