நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை அருகே திடீர்குப்பம் கடுவையாற்றின் ஓரம் சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான குடோனில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த குடோனில் வெளிநாடுகளுக்கு கடத்த பதப்படுத்தி வைத்திருந்த ஆயிரம் கிலோ எடையுள்ள ரூ.1.50கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து சபரிநாதன்(40), ஊழியர்கள் சுரேஷ்(47), செல்வம் (50) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Related Stories: