ஆலந்தூர்: கீழ்க்கட்டளை குமரன் நகரை சேர்ந்தவர் பரணிதரன் (32). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பரணிதரன் சேப்டி இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். ஆன்லைன் டிரேடிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், தான் செய்துவந்த வேலை விட்டுவிட்டு முழுமையாக ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால், அதை ஈடுசெய்ய தனது மனைவியின் நகைகளையும் விற்றுள்ளார். இதனால் கணவன் மற்றும் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டு, மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.