கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே உடும்பு வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார். வனப்பகுதியில் கண்காணிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் அவர் சிக்கினார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதாக, கெங்கவல்லி வனச்சரக அலுவலர் சிவக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில், வனவர் செல்வன், வெங்கடேசன், வனக்காப்பாளர் பெரியசாமி, பச்சமுத்து, வனக்காவலர் விஜயகாந்த் மற்றும் குழுவினர் நேற்று முன்தினம், கெங்கவல்லி காப்புக்காடு இடையப்பட்டி வழித்தட சரகத்தில் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மலை சரிவில் மர்மநபர் ஒருவர், கையில் கத்தி வைத்துக்கொண்டு உடும்பு வேட்டையாடி அதனை எடுத்துச் செல்வது தெரியவந்தது.