திருச்சி: மதிமுகவினருடன் தகராறு வழக்கில் திருச்சி கோர்ட்டில் நேற்று சீமான் ஆஜரானார். மதிமுக பொது செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தனர். அப்போது இவர்களை வரவேற்பதில் ஏற்பட்ட தகராறில் இரு கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரரின் டூவீலர் அடித்து நொறுக்கப்பட்டது.
இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் சீமான் மற்றும் அவரது கட்சியினர் 14 பேர் மீதும், மதிமுகவினர் 5 பேர் மீதும் பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்தனர்.