மீனம்பாக்கம் வாகன நிறுத்தும் இடம் தற்காலிக மூடல்

சென்னை: மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளுக்காக மறு அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால், வாகன நிறுத்தும் பகுதி, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும், நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்திலும் நிறுத்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் இந்த சிரமத்திற்கு வருந்துகிறது.

Related Stories: