மீனம்பாக்கம்: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1.07 கிலோ தங்கப்பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கப் பசையை கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, திருச்சியை சேர்ந்த ஒரு பயணி, சுற்றுலா விசாவில் துபாய்க்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவருடைய உடமைகளை சோதித்த போது அதில் எதுவும் இல்லை.