ஆவடி: திருமுல்லைவாயலில் ஒரு வருடத்திற்கு முன்பு முதியவரை தாக்கி செல்போன் மற்றும் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்து திருமுல்லைவாயல், குளக்கரை பகுதியில் வசிப்பவர் சந்திரன் (85). சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சந்திரலேகா, கடந்த வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே, தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு 12ம் தேதி 9. 45 மணி அளவில் சந்திரன் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் அத்துமீறி திடீரென நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், இவரை கட்டி போட்டு, அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் அணிந்திருந்த அரை சவரன் மோதிரத்தையும் திருடி சென்றனர்.