திருமலை: தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் 30 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ரயில் நிலையம் அருகே உள்பட பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 7.97 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி ஒரேநாளில் மொத்தம் ரூ.7.48 கோடி மதிப்புள்ள 12.97 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.இதுதொடர்பாக 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.