தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, தேனி, தென்காசி, தூத்துக்குடியில் மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, சேலத்தில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்படுகிறது. தஞ்சாவூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: