தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.

Related Stories: