கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்

சென்னை: கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.  ஆவடி அடுத்து வெள்ளனுர் பகுதியை சேர்ந்தவர் தாராநத்து(35).  கடந்த வருடம் நவம்பர் மாதம் அம்பத்தூரில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இவரது செல்போனை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஆவடி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், செல்போன் பறிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  இதில், தென்காசி பகுதியை சேர்ந்த குமார்(23) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்க தீவிரம் காட்டி வந்த நிலையில், நேற்று காலை ஆவடி மார்க்கெட் பகுதியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவரை, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: