சென்னை: இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் முன்னோடியாக கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்களிடையே வரவேற்பு கிடைக்கும் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்: கூட்டுறவுத்துறையில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டு முடிவதற்குள்ளாகவே 16.86 லட்சம் உறுப்பினர்களுக்கு ரூ.12,968 கோடி அளவிற்கு வேளாண்மை கடன் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல, தமிழ்நாட்டில் 2,965 கடைகள் ‘‘நம்ம ஊர் நம்ம நியாயவிலைக்கடை’’ முயற்சியின் கீழ் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகின்றன.