பொன்னேரி: மீஞ்சூர் அருகே கஞ்சா போதையில் ஏற்பட்ட மோதலில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலிபருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இது ெதாடர்பாக 3 பேர் பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு (21). இவர் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வல்லரசுவை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பெரிய குளக்கரை அருகே சக நண்பர்களுடன் வல்லரசு கஞ்சா போதையில் இருந்துள்ளார். அப்போது, திடீரென ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் வல்லரசுவின் தலை, கை, கால்களில் வெட்டிவிட்டு நண்பர்கள் தப்பி விட்டனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக வந்த சிலர், மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.