தண்டவாளத்தை கடந்தபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பரிதாப பலி

தாம்பரம்: தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம், நாராயணன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (35). இவர் செங்கல்பட்டு, படாளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்று, இரவு வேலை முடிந்த பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக ரயில் மூலம் பெருங்களத்தூர் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது, குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இவர் மீது மோதியதில் தூக்கி எறியப்பட்ட பார்த்தசாரதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்த்தசாரதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: