சென்டர் மீடியனில் மோதி எலக்ட்ரீஷியன் பரிதாப பலி

ஆவடி: ஆவடி அடுத்த பொத்தூர், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (40).  எலக்ட்ரீஷியன்.  இவர், நேற்று முன்தினம்  மாலை 4 மணி அளவில்,  தனது  இருசக்கர வாகனத்தில், பூந்தமல்லி 400 அடி வெளி வட்டச் சாலையில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பட்டாபிராம் நெமிலிச்சேரி, செல்லியம்மன் கோவில் அருகே, சர்வீஸ் சாலையில் இருந்து மேம்பாலம் ஏறும் போது, நிலை தடுமாறி வண்டியுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில், மாரியப்பன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து  பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில்,  சர்வீஸ் சாலையில் இருந்து மேம்பாலம் ஏறும் போது மாரியப்பனுக்கு  வலிப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, வாகனத்தை நிறுத்த முயற்சி செய்துள்ளார். அதற்குள் வாகனம் சென்டர் மீடியனில் மேதி விபத்தானது  தெரிய வந்தது.

Related Stories: