காஞ்சிபுரம்: மணல்மேடு இருளர் குடியிருப்பு பகுதியில், பொதுமக்கள் மற்றும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மின்சார வசதியில்லாமல் அவதிப்படுவதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானநிலையில், அப்பகுதியில் அதிகாரிகள் நேரில் சென்ற ஆய்வு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியம், கூரம் ஊராட்சியில் அமைந்துள்ள மணல்மேடு பழங்குடியின இருளர் குடியிருப்பு பகுதியில், மின்சார வசதி இல்லாமல், ராந்தல் விளக்கு ஒளியில் படிக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், அங்கு வசிக்கும் மக்கள் மின்சாரம் பெறுவதற்கு பல்வேறு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று முன்தினம் நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.